மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'கடலோர கவிதைகள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேகா. அதன் பிறகு புன்னகை மன்னன், நம்ம ஊரு நல்ல ஊரு, சொல்வதெல்லாம் உண்மை, ஆண்களை நம்பாதே, எங்க ஊரு பாட்டுக்காரன், சின்னமணிக்குயிலே, செண்பகமே செண்பகமே, ராசாவே உன்னை நம்பி, என் பொம்முட்டி அம்மாவுக்கு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். 1986ல் அறிமுகமான ரேகா, 2000மாவது ஆண்டில் இருந்து குணசித்ர நடிகையாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 20 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார். 'மிரியம்மா' என்ற இந்த படத்தில் டைட்டில் ரோலான மிரியம்மாவாக நடிக்கிறார்.. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்குகிறார். ரேகாவுடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். 72 பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது.