மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது. தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஷ்வரன், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை நேற்று சந்தித்து பேசினார். அப்போது ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு வெங்கடேஷ்வரன் அழைப்பு விடுத்தார். ராமாயண இதிகாசத்தில் தொடர்புடைய புனித தலங்களையும், இதர பாரம்பரிய கலாசார மற்றும் மத சின்னங்களை பார்வையிடவும் இலங்கைக்கு வருமாறு வெங்கடேஷ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
ரஜினியின் வருகை இந்தியா, இலங்கை இரு நாடுகளின் சுற்றுலா வளர்ச்சி, திரைப்பட வளர்ச்சி ஆகியவற்றுக்கு அது உதவும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது கையில் உள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு கண்டிப்பாக இலங்கை வருவதாக ரஜினி உறுதி அளித்துள்ளார். ரஜினியை இலங்கை தூதர் சந்தித்திருப்பது இதுவே முதல் முறை, ஏற்கெனவே சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகள் ரஜினியை தங்கள் நாட்டுக்கு விருந்தினராக அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.