ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! |
தமிழில் 'அழகிய தீயே' படத்தில் அறிமுகமாகி சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், பாசக்கிளிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவ்யா, திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறார். தற்போது 'ஜானகி ஜானே' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
படத்தின் புரமோசன் நிகழ்வுகளில் நவ்யா பங்கேற்று வந்தார். கோழிகோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. புரமோசன் பணிகளால் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வகையான உணவு அருந்தியதால் அவருக்கு புட் பாய்சன் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. நவ்யா பூரண நலத்துடன் திரும்பி வரும் வரை புரமோசன் பணிகளை நிறுத்தி வைப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.