மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் 'அழகிய தீயே' படத்தில் அறிமுகமாகி சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், பாசக்கிளிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவ்யா, திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறார். தற்போது 'ஜானகி ஜானே' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
படத்தின் புரமோசன் நிகழ்வுகளில் நவ்யா பங்கேற்று வந்தார். கோழிகோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. புரமோசன் பணிகளால் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வகையான உணவு அருந்தியதால் அவருக்கு புட் பாய்சன் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. நவ்யா பூரண நலத்துடன் திரும்பி வரும் வரை புரமோசன் பணிகளை நிறுத்தி வைப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.