அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
திமுக குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி , அருள்நிதி ஆகிய மூவருமே சினிமாவில் பங்களித்து வருகிறார்கள். இவர்களில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் படங்கள் தயாரிப்பதோடு, பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். தயாநிதி அவ்வப்போது படங்கள் தயாரிக்கும் நிலையில், அருள்நிதி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது. உதயநிதி தற்போது அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். அவரின் கடைசி படமான மாவீரன் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ளது.
இதனிடையே சென்னையில் நடைபெறும் அனைத்து பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகிறார் உதயநிதி. சென்னை - குஜராத் அணிகள் மோதிய பிளே ஆப் சுற்று போட்டியை கண்டுகளித்தார் உதயநிதி. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியை உதயநிதியுடன் அவரது சகோதரர்களான தயாநிதி, அருள்நிதியும் கண்டுகளித்துள்ளார்கள்.
மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை தனது வெளியிட்டு, ‛‛ஹேப்பி பிரதர்ஸ் டே என்றும் பதிவிட்டு தனது சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அருள்நிதி. மே 24ம் தேதியான இன்று பிரதர்ஸ் டே கொண்டாடப்பட்டு வருவதால் இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.