இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் |
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ஜெயிலர், அரண்மனை 4 போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ரூ.5 கோடி சம்பளம் கேட்டதால் அவரை நிராகரித்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இது குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிப்பது எப்பவும் எனக்கு பிடிக்கும். பாலகிருஷ்ணா மீதும் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கி வரும் படத்தில் நான் ஒரு பாடலுக்கு ஆடுவது பற்றிய ஆதாரமற்ற செய்திகளை படிக்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது. இதுபோன்ற செய்திகளை தெரிவிக்கும் முன்பு தயவுசெய்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்” என இவ்வாறு தெரிவித்துள்ளார் .