மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ஜெயிலர், அரண்மனை 4 போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ரூ.5 கோடி சம்பளம் கேட்டதால் அவரை நிராகரித்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இது குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிப்பது எப்பவும் எனக்கு பிடிக்கும். பாலகிருஷ்ணா மீதும் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கி வரும் படத்தில் நான் ஒரு பாடலுக்கு ஆடுவது பற்றிய ஆதாரமற்ற செய்திகளை படிக்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது. இதுபோன்ற செய்திகளை தெரிவிக்கும் முன்பு தயவுசெய்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்” என இவ்வாறு தெரிவித்துள்ளார் .