என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் கோலாகலமாய் நடந்து வருகிறது. ஹாலிவுட் கலைஞர்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த திரைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பிலும் நிறைய திரைப்பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் முருகன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர்.
இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்னர். மேலும் 21வது ஆண்டாக நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகைகள் மிருணாள் தாக்கூர், சாரா அலிகான், ஊர்வசி ரவுட்டேலா, மனுஷி சில்லார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் நடிகை குஷ்புவும் இந்தியா சார்பில் ஒரு பிரதிநிதியாக பங்கேற்றுள்ளார்.
கேன்ஸ் பட விழாவில் நடந்த சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகை குஷ்பு பாரம்பரிய உடையான பட்டுச்சேலை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தார். சேலைக்கு ஏற்ற அவர் அணிந்த ஆபரணங்களும் பார்வையாளர்களை கவர்ந்தது. மணிப்பூரி மாநில சினிமா சார்பில் குஷ்பு கலந்து கொண்டார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛கேன்ஸ் திரைப்பட விழாவில் நம் அழகிய தேசமான இந்தியாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பெருமையுடன் முன்னோக்கி எடுத்துச் செல்கிறேன். சிவப்பு கம்பள வரவேற்பில் தென்னிந்திய பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டுப்புடவையில்... இந்த பெருமைமிகு விழாவில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது எவ்வளவு பெருமை'' என குறிப்பிட்டுள்ளார்.