பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இதுவரை ரொமாண்டிக், காமெடி மற்றும் பேமிலி சென்டிமெண்ட் படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன் தற்போது 'போர் தொழில்' என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். அசோக் செல்வனுடன் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
“தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதை. இளம் காவலராக அசோக் செல்வன் நடிக்கிறார். இதில் அசோக் செல்வன் மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். அந்த மூத்த காவலர் சரத்குமார். ஆக்சன், சஸ்பென்ஸ் திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும்” என்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.