ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
இதுவரை ரொமாண்டிக், காமெடி மற்றும் பேமிலி சென்டிமெண்ட் படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன் தற்போது 'போர் தொழில்' என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். அசோக் செல்வனுடன் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
“தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதை. இளம் காவலராக அசோக் செல்வன் நடிக்கிறார். இதில் அசோக் செல்வன் மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். அந்த மூத்த காவலர் சரத்குமார். ஆக்சன், சஸ்பென்ஸ் திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும்” என்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.