இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கடந்த மார்ச் 31ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடித்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இதில் விஜய்சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சேத்தன், கவுதம் மேனன், நாயகி பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் தங்களது நடிப்புக்காக மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றனர். ரிலீஸான சமயத்திலேயே தமிழ்நாட்டையும் தாண்டி இந்த படம் மற்ற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்றது.
அந்த வகையில் இந்த படத்தில் ஆயுதப்படை கான்ஸ்டபிள்களில் ஒருவராக நடித்திருந்த கன்னட நடிகர் சர்தார் சத்யா என்கிற எஸ் சத்யா என்பவர் இந்த படம் தனது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் இதை தொடர்ந்து தனக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன என்றும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
“கடந்த 2007ல் இருந்து கன்னட சினிமாவில் பயணித்து வந்தாலும் இதுவரை தான் கற்றுக் கொண்ட விஷயங்களில் இருந்து முற்றிலும் மாறாக வெற்றிமாறனிடம் இருந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.. சினிமாவில் நடிப்பு என்றால் என்ன என்பதை விடுதலை படத்தில் நடித்த பிறகு தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்” என்று சிலாகித்து கூறியுள்ளார் நடிகர் எஸ் சத்யா