மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
கோடை விடுமுறை சுட்டெரிக்கும் வெயிலுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடிக்கும் வெயிலில் மக்களும் தியேட்டர்கள் பக்கம் போக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதக் கடைசியில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குக் கூட எதிர்பார்த்த அளவிற்கும் பெரிய வரவேற்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வரும் 19ம் தேதி தற்போது வரை மூன்று படங்களுக்கான வெளியீட்டு அறிவிப்புகளே வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', விஜய் ஆண்டனி இயக்கியும் நடிக்கும் 'பிச்சைக்காரன் 2', ஆகிய படங்கள் தியேட்டர்களிலும், வரலட்சுமி, ஆரவ் நடித்துள்ள 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படம் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் எப்போதே வர வேண்டியது. சில பல சிக்கல்களுக்குப் பிறகு இப்போதுதான் வெளியாக உள்ளது. இந்த வருடம் ஓடிடி தளங்களில் இதுவரையிலும் எந்த ஒரு படமும் நேரடியாக வெளியாகவில்லை. முதல் படமாக 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படம் இருக்கிறது.
மே 19 போட்டியில் வேறு சில படங்கள் சேருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும்.