'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
கோடை விடுமுறை சுட்டெரிக்கும் வெயிலுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடிக்கும் வெயிலில் மக்களும் தியேட்டர்கள் பக்கம் போக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதக் கடைசியில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குக் கூட எதிர்பார்த்த அளவிற்கும் பெரிய வரவேற்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வரும் 19ம் தேதி தற்போது வரை மூன்று படங்களுக்கான வெளியீட்டு அறிவிப்புகளே வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', விஜய் ஆண்டனி இயக்கியும் நடிக்கும் 'பிச்சைக்காரன் 2', ஆகிய படங்கள் தியேட்டர்களிலும், வரலட்சுமி, ஆரவ் நடித்துள்ள 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படம் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் எப்போதே வர வேண்டியது. சில பல சிக்கல்களுக்குப் பிறகு இப்போதுதான் வெளியாக உள்ளது. இந்த வருடம் ஓடிடி தளங்களில் இதுவரையிலும் எந்த ஒரு படமும் நேரடியாக வெளியாகவில்லை. முதல் படமாக 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படம் இருக்கிறது.
மே 19 போட்டியில் வேறு சில படங்கள் சேருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும்.