நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கோடை விடுமுறை சுட்டெரிக்கும் வெயிலுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடிக்கும் வெயிலில் மக்களும் தியேட்டர்கள் பக்கம் போக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதக் கடைசியில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குக் கூட எதிர்பார்த்த அளவிற்கும் பெரிய வரவேற்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வரும் 19ம் தேதி தற்போது வரை மூன்று படங்களுக்கான வெளியீட்டு அறிவிப்புகளே வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', விஜய் ஆண்டனி இயக்கியும் நடிக்கும் 'பிச்சைக்காரன் 2', ஆகிய படங்கள் தியேட்டர்களிலும், வரலட்சுமி, ஆரவ் நடித்துள்ள 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படம் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் எப்போதே வர வேண்டியது. சில பல சிக்கல்களுக்குப் பிறகு இப்போதுதான் வெளியாக உள்ளது. இந்த வருடம் ஓடிடி தளங்களில் இதுவரையிலும் எந்த ஒரு படமும் நேரடியாக வெளியாகவில்லை. முதல் படமாக 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படம் இருக்கிறது.
மே 19 போட்டியில் வேறு சில படங்கள் சேருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும்.