கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன், நேரம் தவறாமையை கடைபிடிப்பவர். படப்பிடிப்புக்கு ஒன்றுக்கு சென்றபோது அவரது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் காரில் இருந்து இறங்கி ஒரு இளைஞரின் மோட்டார் சைக்கிளில் பயணித்து சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு சென்றார்.
இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அமிதாப்பச்சன். அந்த இளைஞருக்கு நன்றி தெரிவித்திருந்தார். தற்போது இந்த பதிவு அமிதாப் பச்சனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவை சிட்டிசன்ஸ் மூவ்மெண்ட் என்ற அமைப்பு மும்பை போலீசுக்கு அனுப்பி வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என தெரிவித்துள்ளது.
இந்த பதிவுக்கு பதிலாக, மும்பை போலீசார் போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என தெரிவித்து உள்ளனர். இதனால் அமிதாப் பச்சனுக்கும், அந்த இளைஞனுக்கும் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கான அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
அனுஷ்காவுக்கும் சிக்கல்
அமிதாப் போன்று நடிகை அனுஷ்கா ஷர்மாவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் தனது காரைத் விட்டு இறங்கி பைக்கில் பயணம் செய்தார். இவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதுபற்றியும் மும்பை போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் இவர் மீதும் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிகிறது.