ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
சமீபத்தில் இயக்குனர் டி.பி.கஜேந்திரன், நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். மூவருமே நகைச்சுவை கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் இரங்கல் கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, நடிகர்கள் டெல்லி கணேஷ், மன்சூரலிகான், பசுபதி, ராஜேஷ், போஸ் வெங்கட், அஜய் ரத்னம், பொன்வண்ணன், உதயா, சரவணன், லியாகத்தலிகான், விக்னேஷ், சிம்ரன், வையாபுரி, நடிகைகள் தேவயானி, ரோகினி, சச்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கார்த்தி தவிர முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் பங்கேற்கவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி “மறைந்த மூவரும் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக இருந்தார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் முக்கியமானவர்களாக இருந்தார்கள். குறிப்பாக மயில்சாமி தானத்திற்கு பிறகுதான் தனக்கு என்று கொடை வள்ளலாக வாழ்ந்தார். மரணம் இயற்கையானதுதான் ஆனால் அது இத்தனை சீக்கிரம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்” என்றார்.