இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் |
விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி, நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படம் வருகிற 19ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் பாடல் காட்சி மலேசியாவில் உள்ள லங்கா தீவு கடலில் படமானபோது படகு மோதி விபத்து ஏற்பட்டதில் விஜய் ஆண்டனி கடலில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை காவியா தாப்பர் காப்பாற்றினார். இதனை விஜய் ஆண்டனியே தெரிவித்திருந்தார்.
விஜய் ஆண்டனியை காப்பாற்றியது எப்படி என்பது குறித்து காவ்யா தாப்பர் கூறியிருப்பதாவது: பாடல் காட்சிக்காக நானும் விஜய் ஆண்டனியும் கடலில் செல்லும் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்தோம். அதனை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் இன்னொரு படகில் இருந்து படமாக்கினர். திட்டமிட்டபடி நாங்கள் மூன்று சுற்றுகள் அவர்களின் படகை சுற்ற வேண்டும். முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்தோம். இரண்டாவது சுற்றின் போது எங்களின் கடல் பைக் அவர்களின் படகின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் படகை ஓட்டிக் சென்ற விஜய் ஆண்டனி கடலுக்குள் தூக்கி வீசப்பட்டார். அவர் கடலுக்குள் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பது எனக்கு முன்பே தெரியும், அதனால் நான் கடலுக்குள் குதித்து அவரை காப்பாற்ற நீந்தி சென்றேன். அதன் பிறகு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாசின் உதவியாளரும் என்னோடு கடலில் குதித்து இணைந்து கொண்டார். நாங்கள் விஜய் ஆண்டனியை மீட்டு கொண்டிருந்தபோது மற்றவர்களும் வந்து விட்டனர்.
சுயநினைவு இல்லாமல் இருந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது எனக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. அதில் எனது மூக்கில் எலும்பு முறியும், நெற்றியில் உள் காயமும் இருந்தது. அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. கடலில் விழுந்த நான் மரணத்தின் எல்லை வரை சென்று திரும்பினேன். இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. விபத்தில் ஏற்பட்ட உள் காயம் இன்னும் என் முகத்தில் இருக்கிறது. என்றார்.