'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
பத்து தல படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இது அவரது 48வது படமாகும். இந்த படத்தில் கமல்ஹாசனும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரஜினிக்காக தான் உருவாக்கிய கதையில் சிம்புவை இயக்கப் போகும் தேசிங்கு பெரியசாமி, தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த பதான் படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது சம்பளம் பல கோடிக்கு உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிம்புவை பொறுத்தவரை 20 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே சிம்புவை விட அதிகப்படியான சம்பளத்துக்கு ஒப்பந்தமாவார் என்றும் கூறப்படுகிறது.