படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் | சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு |
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தில் தொடங்கி கடைசியாக வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் படம் வரைக்கும் தொடர் வெற்றிகளை மட்டும் குவித்து வந்துள்ளார். தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமவுலி.
இந்நிலையில் அவரது கனவு படமான மகாபாரதம் பற்றி பல இடங்களில் பகிர்ந்துள்ளார். அதேபோல் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அளித்த பேட்டியில் மகாபாரதம் பற்றி கூறியுள்ளார். அதன்படி, "நான் மகாபாரதத்தை படமாக்க ஒரு சில வருடங்களோ அல்லது அதற்கும் மேல் கூட ஆகலாம், ஏனெனில் மகாபாரதம் பற்றி உள்ள அனைத்து விதமான புத்தகங்களை நான் தேடி படிக்கிறேன். ஆனால், இப்போது மகாபாரதம் பற்றி என்னிடம் நீங்கள் கேட்டால் என்னால் உறுதியாக ஒரு விஷயம் சொல்ல முடியும், மகாபாரதத்தை குறைந்தது 10 பாகங்கள் கொண்ட படங்களாக தான் உருவாக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.