மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து 'சிடி 23' என்ற பெயரில் பிரமாண்ட விழா நடத்தி கொண்டாட இருக்கிறார்கள். வருகிற ஜூன் 11ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த விழாவை 6 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக நடத்த இருக்கிறார்கள்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தளபதி கூறும்போது “தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் சென்னையில் பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திரைப்பட மற்றும் சின்னத்திரை துறைகளை சார்ந்த கலைஞர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து 6 மணி நேரம் நடைபெறும்.
ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் செய்தி, மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து விழாவுக்கு அழைக்க இருக்கிறோம்” என்றார்.