மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பொன்னியின் செல்வனில் குந்தவையாக மிரட்டிய த்ரிஷாவின் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் 'தி ரோட்'. பொன்னியின் செல்வனுக்கு பிறகு விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வரும் திரிஷா தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்ட நிலையில், அவர் முன்பிருந்து சம்பளத்தில் புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றிய படம் 'தி ரோட்'.
இந்த படம் ஹீரோயின் சப்ஜெக்ட் ஆக்ஷன் படம். இதில் அவருடன் 'சார்ப்பட்டா' புகழ் டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கி உள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் அருண் வசீகரன் கூறியதாவது: திரிஷாவின் திரைப்பயணத்தில் "தி ரோட்" திரைப்படம் மிகப்பெரியப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இரு பாகங்களுக்குப் பிறகு இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் படமாக்கி உள்ளோம். மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.