பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அண்மையில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முரளி ராமசாமி தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சந்திப்புக்கு பிறகு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றோம். எங்கள் கோரிக்கை மனுவையும் முதல்வரிடம் அளித்துள்ளோம். 2009ம் ஆண்டு திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்காக சென்னையை அடுத்துள்ள பையனூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
அதில் 10.5 ஏக்கர் நிலம், நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவு காலாவதியாகி இருந்தது. இந்த சூழ்நிலையில் அந்த அரசாணையை மீண்டும் முதல்வர் புதுப்பித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம். தமிழக அரசின் நல்லுறவோடு தயாரிப்பளார் சங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செல்ல இருக்கிறது. என்றார்.
இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் தமிழ் குமரன், இணைச் செயலாளர் சவுந்தர பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, எம்.எல்.ஏ அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.