ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் | தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி | 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகளை வழங்குங்கள்: தமிழக அரசுக்கு கோரிக்கை | கர்நாடகாவில் 'தக்லைப்' வெளியிட வர்த்தக சபை அனுமதிக்கணும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் | வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே | தக் லைப் விவகாரத்தால் கலக்கத்தில் ஜனநாயகன் | பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை எழுதி தயாரித்த என்.டி.ராமராவ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்த தர்மேந்திரா, நடிகையாக இருந்த ஹேமமாலினி ஆகியோர் இன்று தங்களது 43வது திருமண நாளைக் கொண்டாடி உள்ளனர். அது பற்றிய தகவலைப் பகிர்ந்து தனது கணவர் தர்மேந்திராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஹேமமாலினி.
தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலினி, தமிழ்ப் படங்களில் நடிக்க முயன்று ஓரிரு படங்களில் மட்டும் முக்கியத்துவமில்லாத கதாபாத்திரங்களில் நடித்தார். அதன்பின் ஹிந்தியில் ராஜ்கபூரின் 'சப்னோ கா சௌதாகர்' படம் மூலம் 1968ம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார் ஹேமமாலினி.
1970ல் தர்மேந்திரா ஜோடியாக 'தும் ஹசின் மெய்ன் ஜவான்' என்ற படத்தில் முதல் முறையாக நடித்தார். ஏற்கெனவே திருமணமாகி இரண்டு மகன்கள், இரண்டு மகள்களுடன் இருந்த தர்மேந்திராவை 1980ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஹேமமாலினி. அவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் இஷா தியோல்.
இன்று திருமண நாளைக் கொண்டாடும் ஹேமமாலினி, தர்மேந்திரா தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.