மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஆர்.ஆர்.ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ் பாபு நாயகனாக நடிக்க இருக்கும் படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ராஜமவுலி. இந்த நிலையில் மஹேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய டுவிட்டரில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய புகைப்படங்களை பதிவிட்டு, வரலாற்றை உயிர்ப்பிக்கும் மற்றும் கற்பனையை தூண்டும் அற்புதமான எடுத்துக்காட்டுகள் இவை என்று குறிப்பிட்டு இருப்பவர், இது போன்ற பழங்கால நாகரிகத்தைப் பற்றி இயக்குனர் ராஜமவுலி படம் எடுத்தால் உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்து வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு ராஜமவுலி அவருக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார். அந்த பதிவில், தோலாவிராயில் மகதீரா படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற போது பழமையான ஒரு மரத்தை பார்த்தேன். அது சிதைந்து போய் இருந்தது. அப்போது சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த மரத்தின் மூலம் விவரிக்கும் படியான ஒரு படத்தை எடுக்க நினைத்தேன். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு சென்ற போது மொகஞ்சதாரோவிற்கு செல்ல மிகவும் முயற்சி எடுத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் ராஜமவுலி.
அதோடு கடந்த 2018ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக தான் பாகிஸ்தான் சென்றபோது, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றி பார்த்தபோது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு அது குறித்த சில ஆச்சரிய தகவல்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.