கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
பெண்களை முன்னிலைப்படுத்தும் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருவதில் முக்கிய இடத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி படங்களுக்கு பிறகு அவர் நடித்து வெளிவர உள்ள படம் 'பர்ஹானா'. இந்த படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது : 3 பெண்களின் தாயான ஒரு இஸ்லாமிய பெண்ணின் கதை இது. இளம் வயதிலேயே இப்படி நடிக்கலாமா என்கிறார்கள். நல்ல கேரக்டர் என்றால் 100 குழந்தைக்கு தாயாகவும் நடிப்பேன். வித்தியாசமான கதைகளில் விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே என் இலக்கு. இந்த படத்தில் இஸ்லாமிய பெண் என்பதால் ஒரு இஸ்லாமிய தோழியை என் வீட்டுக்கு அழைத்து அவர்களது பழக்க வழக்கங்கள், நடைமுறைகளை கற்றுக் கொண்டேன். முறைப்படி தொழுகை நடத்தவும் கற்றுக் கொண்டேன். இந்த படம் இஸ்லாமிய சமூகத்தையும், இஸ்லாமிய பெண்களையும் உயர்த்தும் படமாக இருக்கும்.
ஆச்சாரமான இஸ்லாமிய குடும்பத்து பெண்ணுக்கு வறுமை. வேறு வழியில்லாமல் அவர் கால் செண்டருக்கு வேலைக்கு செல்கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து குடும்பத்தையும், தன்னையும் காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை. பெண்கள் எந்த சூழ்நிலையிலும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படம். என்றார்.