‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த 2021ம் ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் சென்னை திரும்பும்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிகாடு அருகே கார் விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவரது தோழி வள்ளி பவனி ஷெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. யாஷிகா நேரில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் வருகிற ஜூலை மாதம் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் காரை ஓட்டி வந்தது யாஷிகாதான் என்றாலும் அவர் விபத்தின்போது மது அருந்தவில்லை என்று சான்றிதழ் பெற்றிருப்பதால் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.