பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கடந்த 2021ம் ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் சென்னை திரும்பும்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிகாடு அருகே கார் விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவரது தோழி வள்ளி பவனி ஷெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. யாஷிகா நேரில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் வருகிற ஜூலை மாதம் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் காரை ஓட்டி வந்தது யாஷிகாதான் என்றாலும் அவர் விபத்தின்போது மது அருந்தவில்லை என்று சான்றிதழ் பெற்றிருப்பதால் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.