படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
நடிகர் ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடிப்பதை விட தமிழ், தெலுங்கில் தான் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மட்டும் ரவிதேஜா, விஜய் தேவரகொண்டா, பிரபாஸ் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் ஜெயராம். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜெயராம் விரைவில் ஏப்ரல் 28ல் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாக ரிலீஸூக்காக தயாராகி வருகிறார்,
இந்த நிலையில் தற்போது தனது மனைவி பார்வதியுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் ஜெயராம். சித்திரை விஷுவை முன்னிட்டு அவர் சபரிமலை தரிசனத்திற்காக சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் கடந்த செப்டம்பரில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாவதற்கு முன்பாக இதேபோன்று நடிகர் ஜெயம் ரவியுடன் அவர் சபரிமலை சென்று வழிபட்டு வந்தார் என்பதால், இந்த முறையும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றிக்காக அவர் சபரிமலை சென்று வந்துள்ளதாகவே தெரிகிறது