மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடிப்பதை விட தமிழ், தெலுங்கில் தான் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மட்டும் ரவிதேஜா, விஜய் தேவரகொண்டா, பிரபாஸ் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் ஜெயராம். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜெயராம் விரைவில் ஏப்ரல் 28ல் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாக ரிலீஸூக்காக தயாராகி வருகிறார்,
இந்த நிலையில் தற்போது தனது மனைவி பார்வதியுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் ஜெயராம். சித்திரை விஷுவை முன்னிட்டு அவர் சபரிமலை தரிசனத்திற்காக சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் கடந்த செப்டம்பரில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாவதற்கு முன்பாக இதேபோன்று நடிகர் ஜெயம் ரவியுடன் அவர் சபரிமலை சென்று வழிபட்டு வந்தார் என்பதால், இந்த முறையும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றிக்காக அவர் சபரிமலை சென்று வந்துள்ளதாகவே தெரிகிறது