பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் இரண்டு வாரங்களுக்கும் முன்பு மார்ச் மாதம் 29ம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
டிரைலர் வெளியான யு டியூப் தளங்களில் திடீரென குழப்பம் ஏற்பட்டது. படத்தின் இசை உரிமையைப் பெற்ற டிப்ஸ் தமிழ் நிறுவனத்தின் யு டியூப் சேனலில்தான் முதலில் டிரைலர் வெளியானது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த டிரைலர் முடக்கப்பட்டது. பின்னர் படத்தின் சாட்டிலைட் டிவி உரிமையை வாங்கிய தனியார் டிவி நிறுவனம் அதன் யு டியூப் சேனலில் டிரைலரை வெளியிட்டது.
படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் இரண்டாம் பாகத்திற்கான டிரைலர் மிகவும் பின் தங்கியே உள்ளது. முதல் பாகத்தின் டிரைலர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவன யு டியூப் சேனலிலும், இசை உரிமையைப் பெற்ற டிப்ஸ் தமிழ் நிறுவனத்தின் யு டியுப் சேனலிலும் வெளியானது. லைக்கா சேனலில் 11 மில்லியன் பார்வைகளும், டிப்ஸ் சேனலில் 19 மில்லியன் பார்வைகளையும் இதுவரை பெற்றுள்ளது. இரண்டையும் சேர்த்தால் 30 மில்லியன் பார்வைகள், அதாவது 3 கோடி.
ஆனால், அடுத்த வாரம் வெளியாக உள்ள இரண்டாம் பாகத்தின் டிரைலர் கடந்த இரண்டு வாரங்களில் 12 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் 18 மில்லியன் பார்வைகள் பின் தங்கியுள்ளது. டிரைலர் வெளியான நாளில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்தப் பின்னடைவா அல்லது இரண்டாம் பாகத்திற்கு இவ்வளவுதான் எதிர்பார்ப்பா என்பது கேள்விக்குரிய ஒன்றாக உள்ளது.