பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
'பசங்க' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதுவரை பத்து படங்களை இயக்கிய பாண்டிராஜ் கடைசியாக இயக்கி வெளிவந்த படம் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்'. அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
அடுத்து அருள்நிதி நடிக்க உள்ள ஒரு படத்துக்கு கதை எழுத உள்ளார் பாண்டிராஜ். அதோடு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க பாண்டிராஜ் பேசி வருகிறாராம். இருவரும் இணைந்து 2016ல் வெளிவந்த 'கதகளி' படம் மிகவும் சுமாராகப் போன படம். அதற்குப் பிறகு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இணைய உள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
தற்போது விக்ரம் நடிக்க 'தங்கலான்' படத்தையும், சூர்யா நடிக்க 'கங்குவா' படத்தையும் தயாரித்து வரும் அந்நிறுவனத்தின் அடுத்த படமாக விஷால், பாண்டிராஜ் படம் இருக்கும் என்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரலாம்.