'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கிய ராஜமவுலி, அதையடுத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கினார். 1000 கோடி வசூலித்த அப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். அமேசான் காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கிய ராஜமவுலி இந்த படத்தை மூன்று பாகங்களாக இயக்கப் போகிறாராம். அதோடு இப்படம் இந்து கடவுளான அனுமனை மையமாகக் கொண்ட கதையில் உருவாக இருக்கிறதாம். இதுவரை ராஜமவுலி இயக்கிய படங்களை காட்டிலும் கூடுதல் பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாக இருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.