எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களை தொடர்ந்து அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்தனர். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி செய்யப்பட்டு அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் இப்படத்தை விட்டு வெளியேறினார். இப்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அரண்மனை 4ம் பாகத்தில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா ஆகியோரின் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டு வருகின்றது.