மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா மற்றும் பலர் நடித்து கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி வெளியான படம் 'அயோத்தி'. விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு ரசிகர்களிடமும் பாராட்டுக்கள் குவிந்தது.
கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'அயோத்தி' படத்தைப் பார்த்து பாராட்டி டுவீட் செய்துள்ளார். “அயோத்தி…
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர்.மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!,” என்று பாராட்டியுள்ளார்.
அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்து சசிகுமார், “நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்,” என டுவீட் செய்துள்ளார். 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்த், சசிகுமார் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி, “உலகில் உள்ள அத்தனை விருதுகளும் ஒரு நொடியில் கிடைத்த மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் தருகிறது தங்களின் பாராட்டுகள்... நன்றி சார்,” என மகிழ்ந்துள்ளார்.