ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! |
இந்திய சினிமாவில் மேக்அப் போடாமல் நடிக்கும் ஒரே நடிகை சாய்பல்லவிதான் என்கிறார்கள். அதற்கு காரணம் இயற்கையிலே ரோஸ் நிறத்தில் இருக்கும் அவரது முகத்திற்கு மேக்அப் தேவையில்லை என்பார்கள். ஆரம்பத்தில் அவருக்கு முகத்தில் நிறைய பருக்கள் இருந்தன, இதை மறைப்பதற்காக மேக்அப் போட்டபோது அவரது தோற்றமே மாறியது. அதனால் மேக்அப் போட்டு நடிப்பதில்லை என்று சாய்பல்லவி முடிவெடுத்தார். படத்தின் கேரக்டருக்கு ஏற்ப சிகை அலங்காரத்திலும் தோற்றத்திலும் சில மாறுதல்களை மட்டும் செய்து கொள்வார்.
இதுகுறித்து சாய்பல்லவி சில நாட்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எனது முதல் படமான 'பிரேமம்' படத்தில் இருந்து இன்றுவரை நான் ஒரு படத்தில் கூட மேக்கப் போட்டது இல்லை. பள்ளி நாட்களில் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. முகத்தில் இருக்கும் முகப்பருக்களை பார்த்து வேதனைப்படுவேன். என் குரல் கூட நன்றாக இருக்காது என்று நினைத்தேன்.
பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று முதலில் பயந்தேன். ஆனால் மேக்கப் இல்லாமல் கூட மிகவும் அழகாக இருக்கிறாய் என்ற பாராட்டு எனக்கு கிடைத்தது. அந்த பாராட்டுதான் எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அது முதல் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.