பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'பாகுபலி' படம் வெளிவந்த பிறகு தென்னிந்தியத் திரையுலகினரின் பார்வை சரித்திரப் படங்கள் பக்கம் கொஞ்சம் திரும்பியது. தற்போதைய கால கட்டப் படங்கள் இல்லாமல் 80களின் படங்கள், சுதந்திர காலப் படங்கள், சரித்திரப் படங்கள் என சீரான இடைவெளியில் வந்து கொண்டிருக்கிறது.
இந்த ஏப்ரல் மாதத்தில் வாரம் ஒரு சரித்திரப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இன்று ஏப்ரல் 7ம் தேதி, சுதந்திர காலக் கதையுடன் 'ஆகஸ்ட் 16, 1947' படம் வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகி உள்ளது.
அடுத்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' தெலுங்குப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதற்கடுத்த வாரம் ஏப்ரல் 21ம் தேதி ஏழாம் நூற்றாண்டை மையமாகக் கொண்ட சரித்திரப் படமான 'யாத்திசை' படம் வெளியாக உள்ளது. அதற்கும் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி சோழர்களின் வரலாறை மையமாகக் கொண்ட சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன் 2' படம் வருகிறது.
இந்த 2023ல் இப்படி அடுத்தடுத்த வாரங்களில் சரித்திரப் படங்கள் வெளிவருவது அதிசய நிகழ்வுதான்.