ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சென்னை, திருவான்மியூரில் உள்ள பிரபல நாட்டிய கல்லூரியான கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியைகள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவிகள் பலர் அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்துள்ள இந்த சம்பவம் குறித்து பிக்பாஸ் போட்டியாளரான அபிராமி தனது கருத்தை கூறியுள்ளார். இவர் முன்னாள் கலாஷேத்ரா மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அளித்த பேட்டியில், 'நானும் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி தான். கலாஷேத்ராவின் ஆசிரியர் நிர்மலா என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறினார். ஹரிபத்மனால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் நிகழ்ந்தது இல்லை. ஹரிபத்மன் சிறந்த ஆசிரியர். ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாணவிகள் பலி ஆடுகளாக மாற்றப்படுகிறார்கள். கலாஷேத்ரா கலாசாரத்தின் அடையாளம். அதற்கு அவப்பெயர் வரும் போது அம்மாவை தவறாக பேசுவது போல் உள்ளது' என்று கூறியுள்ளார். அபிராமியின் இந்த கருத்தானது சோசியல் மீடியாக்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.