மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
பொதுவாக எந்த ஒரு மொழியிலும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியானாலும் அதில் ஏதோ ஒரு படத்தின் மூலம் தான் வருடத்திற்கு ஒரு கதாநாயகனாவது ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவராக கிடைக்கிறார்கள். அதன் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் பிரபலம் ஆகிறார்களா இல்லையா என்கிறது தனிக்கதை. ஆனால் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மலையாள நடிகர் தேவ் மோகன் கதையோ கொஞ்சம் வித்தியாசமானது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான சூபியும் சுஜாதையும் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் இந்த தேவ் மோகன். அந்த படத்தில் நடிகை அதித்தி ராவ் ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ரெயின்போ என்கிற படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தேவ் மோகன். இப்படி அடுத்தடுத்து முன்னணி ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெளிச்சம் பெற்றுள்ளார் தேவ் மோகன். இனி வரும் காலங்களில் போகப்போக இந்த வாய்ப்புகள் மூலம் எப்படி அவர் தன்னை வளர்த்துக் கொள்கிறார் என்பதில் தான் அவரது திரையுலக பயணத்தின் வெற்றி அமையும்.