காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அகிலன் திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இதுதவிர அஹமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் ஜெயம் ரவி ஒரு புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அவர் சினிமா வாழ்க்கையில் முதல் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இதற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.