காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் அபிராமி. வானவில் படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி படங்களில் நடித்தார். திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலான அபிராமி 10 ஆண்டுகளுக்கு பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார்.
தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் அபிராமி தமிழில் மாறா, சுல்தான், நித்தம் ஒரு வானம் படங்களில் நடித்ததார். தற்போது அவர் மீண்டும் தமிழில் 'பாபா பிளாக் ஷீப்' என்ற படத்தின் மூலம் கதை நாயகி ஆகியிருக்கிறார்.
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராஜ்மோகனின் இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'பாபா பிளாக் ஷீப்'. பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த டிராமாவாக உருவாகிறது.
‛‛இது பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமியை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கிறது என்றார் ராஜ்மோகன்.