மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
95வது ஆஸ்கர் விருதில் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை தமிழில் தயாரான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற படம் பெற்றது. தமிழகத்தில் உள்ள முதுமலை தேசியப்பூங்காவில் யானைகளை வளர்க்கும் தம்பதிகளான பொம்மன், பெல்லி ஆகியோர் அந்த டாகுமென்டரியில் இடம் பெற்றிருந்தார்கள். அனாதையாக வந்த யானைக்குட்டிகளை அந்தத் தம்பதியினர் எப்படி வளர்க்கிறார்கள் என்பது பற்றியதுதான் அந்த டாகுமென்டரி படம்.
பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த டாகுமென்டரியில் நடித்திருந்த பொம்மன், பெல்லி இருவரும் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை இன்று(மார்ச் 15) சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார் முக ஸ்டாலின். அதோடு இருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசளித்தார். அப்போது தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.