2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்றது. 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் வென்றது.
நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்ற டால்பி தியேட்டர் அரங்கில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலிக்கு கடைசி வரிசையில்தான் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அது குறித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.
ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட அளவில்தான் இருக்கைகள் ஒதுக்கப்படுமாம். விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளவர்கள் மட்டும் ஒரு சிலரை அழைத்து வர அனுமதி உண்டாம். மற்றபடி அந்த அரங்கில் 3,317 பேர் மட்டுமே அமரும் வசதி உள்ளதாம்.
அந்த விதத்தில் சிறந்த ஒரிஜனல் பாடல் விருதைப் பெற்ற கீரவாணி தரப்பில் இருந்துதான் சிறப்பு அனுமதி பெற்று ராஜமவுலியும், அவரது மனைவியும் கலந்து கொண்டிருக்க முடியும் என்கிறார்கள். அதே சமயத் தீபிகா படுகோனே முன் வரிசையில் அமர்ந்தது பற்றியும் கேள்வி எழுந்தது. அவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டதால் அவருக்கு அங்கும் இடம் தரப்பட்டதாம்.