சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
இன்றைக்கு தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். அவரை இந்த சினிமா உலகிற்கு அழைத்து வந்தவர் அவருடைய தந்தை மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் ஒரு கட்டத்தில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆர்வத்தில் ஒரு சில செயல்கள் செய்துள்ளார். அதில் விஜய்க்கு உடன்பாடு இல்லாததால் தந்தை, மகன் உறவில் விரிசல் ஏற்பட்டது .
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் கோயிலுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இது குறித்து தகவல் தெரிந்ததும், ஏராளமான செய்தியாளர்கள் கோயிலின் முன்பு குவிந்துள்ளனர்.
அப்போது செய்தியாளர் ஒருவர், விஜய் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டுள்ளார்? உடனே அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என ஒரு வரியில் கூறியுள்ளார். அப்பா மகன் இடையே இன்னும் மனஸ்தாபம் தீரவில்லை என்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.