பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு |
துணிவு படத்திற்கு பிறகு மகிழ்திருமேனி இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இந்த படத்தை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய உலக சுற்றுப்பயணத்தை தொடங்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் 62வது படத்தின் கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு, தற்போது மகிழ் திருமேனி இயக்குனராகி இருப்பதால் ஏற்கனவே திட்டமிட்டத்தை விட படப்பிடிப்பு தாமதமாகிவிட்டது. அதோடு கதை மற்றும் நடிகர் - நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் இன்னும் முடிவடையாததால் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாவதிலும் தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தை மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி நான்கே மாதத்தில் முடிக்க திட்டமிட்டு இருந்த அஜித் குமார், அவசர அவசரமாக படப்பிடிப்பு நடத்தினால் திட்டமிட்டபடி ஒரு தரமான படமாக கொடுக்க முடியாது என்பதால் தனது உலக சுற்றுலா பயணத்தை மேலும் சில மாதங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறாராம். குறிப்பாக விஜய்யின் லியோ படம் பிரமாண்டமாக உருவாகி வருவதால் அந்த படத்திற்கு இணையாக தனது 62 வது படத்தையும் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும் அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இடத்தில் அதிகப்படியான அவசரம் காட்டாமல் நிதானமாக படப்பிடிப்பு நடத்துங்கள். திட்டமிட்டதை விட கூடுதலாக பல மாதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு நான் உலக சுற்றுப்பயணத்தை வைத்துக்கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறாராம்.