எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது . இதனை தொடர்ந்து அரண்மனை படத்தின் 4 பாகத்தை உருவாக்க உள்ளார். கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு வெளியேறினார். தற்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அரண்மனை 4ம் பாகம் இரு கதாநாயகிகளை கொண்டுள்ள கதைக்களமாக இருப்பதால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே அரண்மனை 3 படத்தில் ராஷி கண்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.