என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் கடந்த பிப்ரவரி 2ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும், குறிப்பாக நடிகர் கமல்ஹாசனை வைத்து தொடர்ந்து பல விருது பெற்ற படங்களை இயக்கியவர் கே விஸ்வநாத். 92 வயதான அவருக்கு 88 வயதில் ஜெயலட்சுமி என்கிற மனைவி இருந்தார். இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கே.விஸ்வநாத் இறந்து 24 நாட்களே ஆகியுள்ள நிலையில் நேற்று இரவு அவரது மனைவி ஜெயலட்சுமியும் உடல்நல குறைவு காரணமாக காலமானார். தொடர்ந்து இப்படி இரண்டு மூத்த குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளது அவர்கள் குடும்பத்தில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் கூட சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.