மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரையில் சீரியல்களில் ஒரு காலத்தில் பேவரைட் ஹீரோவாக வலம் வந்த பிரஜின் பத்மநாபன் தற்போது வெள்ளித்திரை படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். திரைப்பட வாய்ப்புக்காக 'வைதேகி காத்திருந்தாள்' தொடரிலிருந்து சில எபிசோடுகளுடன் விலகிவிட்டார். பிரஜின் நடிப்பில் டி-3 திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் 'ஹையானா', 'நினைவெல்லாம் நீயடா' என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சினிமா என்ட்ரிக்கு பிறகு சின்னத்திரை பக்கம் மீண்டும் வரமாட்டார் என பிரஜினின் ரசிகர்கள் கவலையுற்றிருந்த நிலையில், அவர் தற்போது ஜீ தமிழ் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். தவமாய் தவமிருந்து என்கிற தொடரில் பிரஜின் கடவுள் முருகனாக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதன் புரோமோவை பார்க்கும் போது சீடன் படத்தில் தனுஷின் சரவணன் கதாபாத்திரத்தை காப்பி அடித்திருப்பது போல் உள்ளது.