பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் என்பது இல்லையே படத்தின் படப்பிடிப்பு முடிவுபெற்றதை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் கதாநாயகியான நடிகை எமி ஜாக்சன் நடித்துள்ளார். நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மீண்டும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதில் க்ளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதோடு இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதையொட்டி அருண் விஜய், எமி ஜாக்சன் மற்றும் படக்குழுவினர்கள் உள்ளிட்டோர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்கள்.