‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் என்பது இல்லையே படத்தின் படப்பிடிப்பு முடிவுபெற்றதை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் கதாநாயகியான நடிகை எமி ஜாக்சன் நடித்துள்ளார். நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மீண்டும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதில் க்ளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதோடு இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதையொட்டி அருண் விஜய், எமி ஜாக்சன் மற்றும் படக்குழுவினர்கள் உள்ளிட்டோர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்கள்.