மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதோடு விஜய்யின் லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து தனது அடுத்த படத்தின் கதையை முடிவு செய்துள்ளாராம். இந்த கதை இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதை என்பதால் இதில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சன் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் இதனை ஒரு பான் இந்திய படமாக்க திட்டமிட்டு உள்ளார் கவுதம் மேனன். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் நடித்த எந்த படமும் சமீபத்தில் வெற்றி பெறவில்லை . தொடர் தோல்விகளை கொடுத்த இவர்கள் தோல்வியில் இருந்து மீண்டு கூட்டணியாக ஒரு நல்ல வெற்றி திரைப்படம் தருவார்களா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பி வருகிறது.