பாலிவுட் நடிகர் வீட்டில் பொய் சொல்லி நுழைந்த பெண் கைது | பள்ளி ஆசிரியர் டூ நடிகர் : ‛அந்த 7 நாட்கள்' ராஜேஷின் வாழ்க்கை பயணம் | “என் போதை பழக்கத்தால் வெளிநாட்டில் இருக்கும் என் சகோதரிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது” ; வில்லன் நடிகர் விரக்தி | மன்னிப்பு கேட்பதாக கூறிவிட்டு அவதூறு பரப்பி விட்டார் ; மேனேஜர் குற்றச்சாட்டுக்கு உன்னி முகுந்தன் பதில் | பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார் | மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? |
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதோடு விஜய்யின் லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து தனது அடுத்த படத்தின் கதையை முடிவு செய்துள்ளாராம். இந்த கதை இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதை என்பதால் இதில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சன் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் இதனை ஒரு பான் இந்திய படமாக்க திட்டமிட்டு உள்ளார் கவுதம் மேனன். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் நடித்த எந்த படமும் சமீபத்தில் வெற்றி பெறவில்லை . தொடர் தோல்விகளை கொடுத்த இவர்கள் தோல்வியில் இருந்து மீண்டு கூட்டணியாக ஒரு நல்ல வெற்றி திரைப்படம் தருவார்களா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பி வருகிறது.