காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின், அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'டாடா'. இப்படத்திற்கு விமர்சகர்களிடம் பாராட்டும், ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தைப் பார்த்து தனுஷ் பாராட்டியதாக படத்தின் கதாநாயகன் கவின், கதாநாயகி அபர்ணா தாஸ் இருவரும் பதிவிட்டுள்ளார்கள். அது குறித்து கவின், “ஹாய் கவின், நா தனுஷ் பேசறேன்…… நான் கேட்பது உண்மைதானா என என்னுடைய மூளைக்குப் புரிய சில வினாடிகள் ஆனது. அதிலிருந்து நான் இன்னும் உண்மையில் வெளிவரவில்லை, இங்கு இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன்.
'டாடா' படத்தைப் பார்த்த பிறகு தனுஷ் சாரிடமிருந்து ஒரு அழைப்பைப் பெற்றது உண்மையிலேயே மகிழ்வான ஒரு தருணம். உங்களது அனைத்துப் படங்களையும் பார்த்து, உங்களது அற்புதமான திறமையைப் பார்த்து வியப்படைந்து திகைத்துப் போயிருக்கிறேன். இன்று உங்களிடமிருந்து ஒரு அழைப்பு வந்ததை வெறும் நன்றியுடன் சுருக்கமாக முடித்துவிட முடியாது. வளரும் நடிகர்களைப் பாராட்டுவதன் மூலம் உங்கள் மீது பெரும் மரியாதை இருக்கிறது. உங்களது 'வாத்தி' படத்திற்கு எனது வாழ்த்துகள், உங்களிடமிருந்து எப்போதும் சிறந்த படங்களை எதிர்பார்க்கிறேன், சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எங்களைப் போன்ற வளரும் கலைஞர்களைப் பாராட்டும் உங்கள் மனதிற்கு மிக்க நன்றி,” என அபர்ணா தாஸும் குறிப்பிட்டுள்ளார்.