இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'துணிவு' படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்பட்டது. இதுகுறித்த தகவல்களை விக்னேஷ் சிவனும் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு பிடிக்காததால் அது நிராகரிக்கப்பட்டது. அவரும் கழற்றி விடப்பட்டார். இந்த நிலையில் அடுத்து இயக்குவது மகிழ்திருமேனியா, விஷ்ணுவர்த்தனா என்ற விவாதம் நடந்தது. இதில் விஷ்ணுவர்த்தன் இந்தி படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதால். மகிழ்திருமேனிதான் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து திரும்பிய அஜித், மகிழ்திருமேனியை அழைத்து கதை கேட்டுள்ளார். அந்த கதைக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட இருக்கிறது. கவுதம் வாசுதேவ மேனனிடம் உதவியாளராக இருந்து 'முன்தினம் பார்த்தேனே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மகிழ்திருமேனி. இந்த படம் தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு இயக்கிய தடையறத் தாக்க, மீகாமன், தடம் படங்கள் வெற்றி பெற்றது. கடைசியாக இயக்கிய கலக தலைவன் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்து அவர் அஜித்தை இயக்குகிறார்.