விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி தற்போது தான் ஏற்கனவே நடித்து வெற்றி பெற்ற டிமான்ட்டி காலனி 2 படத்தில் நடித்து வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்தப்படியாக 'திருவின் குரல்' என்ற படத்தில் நடிக்கிறார் அருள்நிதி. லைகாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஹரிஷ் பிரபு இயக்குகிறார். ஆத்மிகா நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். தற்போது படத்தின் முதல்பார்வையை வெளியிட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.