கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் |
உலக அளவிலான சினிமா விருதுகளில் அதிக மதிப்புடையதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது.
விருதுக்கு முன்பாக ஆஸ்கர் விருதுக்காகத் தேர்வாகியுள்ள 'நாமினீஸ்' அனைவரும் கலந்து கொள்ளும் 'ஆஸ்கர் நாமினீஸ் லன்ச்சான்' நிகழ்ச்சி நேற்று இரவு கலிபோர்னியா, பெவர்லி ஹில்ஸ், த பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் டாம் க்ரூஸ், ஹாங் சாவ், ஆஸ்டின் பட்லர், ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், மைக்கேல் வில்லியம்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அடுத்த மாதம் மார்ச் 12ம் தேதி 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய சினிமா ரசிகர்களிடம் எழுந்துள்ளது.