மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு மாபெரும் நடிகர்களுக்கு இடையில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் ஜெய்சங்கர். 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்று போற்றப்பட்டவர். 200 படங்களுக்கு மேல் நடித்த ஜெய்சங்கர் 'முரட்டுக்காளை' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி அதன்பிறகு குணசித்ர வேடங்களிலும் நடித்தார்.
எம்ஜிஆர் அழகுடன் ஒப்பிடப்பட்ட ஜெய்சங்கர் அவரைப்போலவே கொடை உள்ளம் கொண்டவராக வாழ்ந்தார். அவரது மகன்களில் மூத்தவரான விஜய் சங்கர் புகழ்பெற்ற கண் மருத்துவராக இருக்கிறார். மகள் சங்கீதாவும் டாக்டராக இருக்கிறார். இளைய மகன் சஞ்சய் சங்கர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாறு பல புத்தகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது அவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியை அவரது இளையமகன் சஞ்சய் சங்கர் தொடங்கி உள்ளார். ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அடிப்படையில் திரைக்கதை எழுதும் பணிகள் தொடங்கி உள்ளது. வருகிற ஜூலை மாதம் ஜெய்சங்கரின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறார்கள். அப்போது இந்த திட்டம் பற்றி முறையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.