விவாகரத்து, கேன்சர் : இரண்டு வருட போராட்டத்தில் மம்முட்டியின் கதாநாயகி | பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? | பிளாஷ்பேக் : லலிதா பத்மினிக்காக உருவான நாவல் | ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா? | அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் |
'சுந்தரபாண்டியன்' படம் வாயிலாக இயக்குனர் ஆனவர் எஸ்.ஆர்.பிரபாகரன். 'சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம் டா' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இவர், 'பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ்' என்ற என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 'றெக்கை முளைத்தேன்' என்ற முதல் படத்தை தானே இயக்க உள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதை நாயகியாக நடித்துள்ளார்.
கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில், ஜெயப்பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன், போஸ்வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுவாதிஸ், பிரபா, மெர்லின், நிதிஷா என்ற நான்கு புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறார். எஸ்ஆர் பிரபாகரன் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு எழுத்தாளராக நல்ல கருத்துள்ள கதைகளை கதாநாயகர்களை மையப்படுத்திய படங்களில் சொல்ல முடியவில்லை. நல்ல கதைகளை தொடர்ந்து கமர்ஷியலாக பதிவுசெய்ய விரும்புகிறேன் அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நல்ல கதைகளையும் நிறைய புதுமுக இயக்குனர்களையும் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.