தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. நேற்று இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளைப் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியானது. இன்றும் அது தொடர உள்ளது.
நேற்றைய அறிவிப்பில், “சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, மிஷ்கின், மன்சூரலிகான், மாத்யு தாமஸ், கவுதம் மேனன், அர்ஜுன்” ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளார்கள் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இன்று படத்தின் கதாநாயகி த்ரிஷா உள்ளிட்டோரது அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இத்தனை நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளதால் யாருக்கு எப்படி முக்கியத்துவம் கிடைக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படியும் மூன்று மணி நேரப் படத்தைத்தான் எடுக்கப் போகிறார் லோகேஷ். அப்படியே எடுத்தாலும் ஆளுக்கு ஐந்து நிமிடாவது நடிக்க வாய்ப்பு கிடைத்தால்தானே சரியாக இருக்கும்.
நேற்று அறிவிப்பு வெளியான நடிகர்கள், நடிகைக்கு எப்படியும் நல்ல சம்பளம்தான் பேசியிருப்பார்கள். அதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகும். அவ்வளவு சம்பளத்தைக் கொடுத்துவிட்டு அவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றாலும் விமர்சனம் எழும். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் 300 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். லோகேஷ் எப்படியும் சமாளிப்பார் என்றும் கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.