'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. நேற்று இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளைப் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியானது. இன்றும் அது தொடர உள்ளது.
நேற்றைய அறிவிப்பில், “சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, மிஷ்கின், மன்சூரலிகான், மாத்யு தாமஸ், கவுதம் மேனன், அர்ஜுன்” ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளார்கள் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இன்று படத்தின் கதாநாயகி த்ரிஷா உள்ளிட்டோரது அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இத்தனை நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளதால் யாருக்கு எப்படி முக்கியத்துவம் கிடைக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படியும் மூன்று மணி நேரப் படத்தைத்தான் எடுக்கப் போகிறார் லோகேஷ். அப்படியே எடுத்தாலும் ஆளுக்கு ஐந்து நிமிடாவது நடிக்க வாய்ப்பு கிடைத்தால்தானே சரியாக இருக்கும்.
நேற்று அறிவிப்பு வெளியான நடிகர்கள், நடிகைக்கு எப்படியும் நல்ல சம்பளம்தான் பேசியிருப்பார்கள். அதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகும். அவ்வளவு சம்பளத்தைக் கொடுத்துவிட்டு அவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றாலும் விமர்சனம் எழும். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் 300 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். லோகேஷ் எப்படியும் சமாளிப்பார் என்றும் கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.