தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யின் 67வது படத்தை தற்போது இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாரிசு படம் திரைக்கு வந்ததும் விஜய் 67வது படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு பிப்ரவரி மாதத்தில் விஜய் 67வது படத்தின் அறிமுக டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்து இருக்கிறது.